Skip to main content

அரசாணை நகல் கேட்டு 'கிடுக்கிப்பிடி:' பள்ளிகளுக்கு நெருக்கடி

ஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணையை கொண்டு வர, அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகள், 8,000த்துக்கும் மேல் உள்ளன. இவற்றில் படிக்கும், 33 லட்சம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க, 95 ஆயிரம் ஆசிரியர்களுக்கு
அரசு ஊதியம் வழங்குகிறது.

           இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர் பணியிடங்களுக்காக அரசிடம் நிதி பெறுவதிலும், அதை பயன்படுத்துவதிலும், குளறுபடி நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.

கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்ததில், அதிகாரிகளின் துணையுடன், அரசு நிதியுதவியில் மோசடி நடப்பது தெரியவந்துள்ளது. பள்ளியில் போதிய மாணவர் இல்லாத நிலையில், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அதற்கான அரசு சம்பளத்தில், சாதாரண அலுவலக பணிக்கு, ஆட்களை நியமிப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அனைத்து அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் அழைத்து ஆலோசனை நடத்துமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போது, அனைத்து அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், தங்கள் பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர்; அவர்களில் எத்தனை பேருக்கு அரசு ஊதியம் கிடைக்கிறது என்ற தகவலையும் கேட்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் அதில், அரசு உதவி ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் எப்போது துவங்கியது; அதற்கான அனுமதி எண்; அனுமதி பெற்றபோது மாணவர் எண்ணிக்கை, தற்போதுள்ள மாணவர் எண்ணிக்கை போன்ற விவரங்களுடன், ஆசிரியர் பணியிட அனுமதிக்கான அசல் அரசாணையையும், தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகளிடம், ஆசிரியர் நியமனத்திற்கான அரசாணை நகல் கூட இல்லை. சில பள்ளிகள், அரசு முத்திரை இல்லாத, கிழிந்த தாளை வைத்துக்கொண்டு, 'இதுதான் அரசாணை' என, 
கல்வித்துறையில் முறையிட்டுள்ளன. இதனால், ஆவணங்கள் இல்லாத, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்யப்படலாம் என, கூறப்படுகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு