Skip to main content

கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு!


மத்திய அரசின் கலை விழாவில், தமிழக பாரம்பரிய கலைகளான, கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.கலை விழாமத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், தேசிய கலை விழா, 'கலா உத்சவ்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, டில்லியில்
, டிச., 8 முதல், 10ம் தேதி வரை தேசிய போட்டி; 11ம் தேதி பரிசளிப்பு மற்றும் கலை விழா நடக்கிறது. தேசிய போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு, முதல் பரிசாக, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு மாநிலமும், தங்களின் பாரம்பரிய கலைகளை பட்டியலிட்டு, இசை, நாடகம், ஓவியம், நடனம் என, நான்கு விதமான போட்டிகள் நடத்தி, தேசிய போட்டிக்கு, மூன்று குழுவை தேர்வு செய்ய வேண்டும்.
பாரம்பரிய நடனம் உ.பி., - ராமலீலா, மிசோராம் - செராவ் நடனம், காஷ்மீர் - ரப் நடனம், மேற்கு வங்கம் - ஜாத்ரா, கேரளா - புல்லுவன் பாட்டு மற்றும் தமிழக நாட்டுப்புற கலைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட, மாநில போட்டிகளை நடத்தி, தேசிய விழாவுக்கான அணியை தேர்வு செய்ய, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, தமிழக நாட்டுப்புற கலைகளான, ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, பாவைக்கூத்து எனப்படும் பொம்மலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், உறியடி விளையாட்டு, தப்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், பொம்மை கலைகள் மற்றும் கோலக் கலை போன்ற, பல தமிழ் பாரம்பரிய கலைகளை தேர்வு செய்து, மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்கலாம். இதுகுறித்த விரிவான தகவல்களை, அந்தந்த பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிஉள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு