Skip to main content

வாட்ஸ் அப்ல இருக்கீங்களா? கவலைப்படவைக்கும் மத்திய அரசின் புதிய திட்டம்

வாட்ஸ் அப்ல இருக்கீங்களா? உங்களை கவலைப்படவைக்கும் மத்திய அரசின் புதிய திட்டம்
வாட்ஸ் அப்ல இருக்கீங்களா? என்று கேட்பது சாப்டீங்களா? என்று கேட்பது போல் இயல்பாக ஆகிவிட்ட நிலையில் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு கவலை அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்
இணையதளத்தில் ஒரு புதிய திட்டவரைவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டவரைவின்படி வாட்ஸ் அப், ஆப்பிளின் ஐ-மெசேஜ் போன்ற சேவைகளை பயன்படுத்துபவர்கள் தங்கள் அனுப்பும் அனைத்து செய்திகளையும் (தனிப்பட்ட உரையாடல்கள் உட்பட) கண்டிப்பாக 90 நாட்களுக்கு சேமித்து வைப்பது கட்டாயமாகிறது. மேலும் அரசு கேட்கும்பட்சத்தில் அவற்றை வழங்குவதும் கட்டாயமாகிறது.

இதேபோல், சேவையை வழங்கும் நிறுவனங்களும் இந்தியாவிலேயே பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் வசதிகளை ஏற்படுத்துவதும் கட்டாயம். இத்திட்டம் வரைவு நிலையில் மட்டுமே உள்ளது என்றாலும் இது வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு கவலை அளிக்கும் செய்தி என்பது மட்டும் உறுதி. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா