Skip to main content

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம்


ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் வெளியிட்ட அறிக்கை:சத்துணவு மற்றும் அங்கான்வாடி பணியாளர்கள்
ஓய்வூதியர் சங்க பொதுச்செயலர் மாயமலை, 'சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதில் 'சத்துணவு, அங்கன்வாடி பணி நியமனம், தமிழக அரசின், சிவில் சர்வீஸ் நியமனம்; அதற்கு அரசியல் சாசனப்படியான பாதுகாப்பு உண்டு' என, 2007ல் சென்னை உயர் நீதிமன்றமும், 2001ல் சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பு அளித்ததை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு ஓய்வூதிய சட்ட விதிகள்படி, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க உத்தரவு கோரப்பட்டிருந்தது.இந்த ரிட் மனுவை பரிசீலித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன், 'சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஓய்வூதியம் குறித்து, தமிழக அரசு, 12 வாரங்களுக்குள் பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்