Skip to main content

இன்ஜி., கல்லூரியில் எது 'டாப்?' வெளியானது 'ரேங்க்' முறை


பொறியியல் கல்லுாரிகளின் செயல்பாடு அடிப்படையில், அவற்றை தரம் பிரித்து, மோசமாகச் செயல்படும் கல்லுாரிகளை தர வரிசைப்படுத்துவதற்கான வரைவு பட்டியலை, தேசிய அங்கீகார வாரியமான, என்.பி.ஏ., வெளியிட்டுள்ளது.பொறியியல் கல்லுா
ரிகளில், ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்; ஆனால், முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், கல்வித் தரம், தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அத்துடன் தற்போது பொறியியல் கல்லுாரிகளில் சில பாடங்களுக்கு மட்டுமே, என்.பி.ஏ., தரப்பில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கான, மற்ற பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதில், அகில இந்திய கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., முன்னுரிமை அளிக்கிறது.
இந்நிலையில், இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படாமல் தடுக்க, அவற்றுக்கு தர நிர்ணயம் செய்வதில், புதிய தரவரிசை முறையை அறிமுகப்படுத்த, என்.பி.ஏ., திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், அனைத்து கல்லுாரிகளும் தரவரிசைப்படுத்தப்படும்.

இதன்படி, கல்லுாரிகள் தங்களின் செயல்பாடு குறித்து அதற்குரிய படிவத்தில் தகவல் அளிக்க வேண்டும். அவற்றை, என்.பி.ஏ., பரிசீலித்து, நேரில் ஆய்வு நடத்தி, உண்மை நிலவரத்திற்கு ஏற்ப தர வரிசை எண் வழங்கும்.இதற்கான தர வரிசை வரைவு திட்டத்தில், கல்லுாரிகளுக்கு எப்படி தரம் நிர்ணயிப்பது என்ற விவரத்தை, என்.பி.ஏ., நேற்று வெளியிட்டது. மேலும், கல்லுாரியின், 10 வகையான செயல்பாடுகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, அதற்கும் தனி தர எண் வழங்க அறிவுறுத்திஉள்ளது. இந்த வரைவு திட்டம் குறித்து, 15 நாளில் கருத்து தெரிவிக்கும்படி, கல்லுாரிகளை என்.பி.ஏ., கேட்டுஉள்ளது. கூடுதல் விவரங்களை, www.nbaind.org
/ இணையதளத்தில் அறியலாம்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு