Skip to main content

உலக சிக்கன நாள் விழா: மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்த ஏற்பாடு

உலக சிக்கன நாள் விழா: மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த ஏற்பாடு
பள்ளி கல்வித்துறை மற்றும் சிறுசேமிப்புத்துறை சார்பில் மாணவ, மாணவிகளிடையே சேமிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உலக சிக்கன நாள் விழா கடைபிடிக்கப்பட்டு வருவதால், அன்றைய
நாளில் சிக்கனம் மற்றும் சேமிப்பினை வலியுறுத்தி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி இன்று கூறுகையில்,


உலக சிக்கனநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அக்.30-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பு பண்புகளை வளர்க்கும் வகையில் கட்டுரைப்போட்டி, நாடகம், நடனம், பேச்சு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் 3 பேருக்கு உலக சிக்கன நாள் விழா அன்று ஆட்சியரால் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் ஆகியவை சிறுசேமிப்புத்துறை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் நிகழாண்டிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்க செய்வதற்கு தலைமையாசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போட்டி, வருகிற அக். முதல் வார இறுதியில்கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் அளவில் நடத்தப்பட இருக்கிறது. இப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் குழுவினர் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு