Skip to main content

திறந்தநிலை பல்கலை.க்கு யுஜிசி அங்கீகாரம் நீட்டிப்பு


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் கூறினார்.இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் அளித்த
பேட்டி:


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தவறான தகவலாகும்.தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி-யிடம் அங்கீகார நீட்டிப்பு பெற வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை.அதன்படி, 2015-16 ஆம் ஆண்டுக்கு அங்கீகார நீட்டிப்புக்கு பல்கலைக்கழகம் விண்ணப்பித்திருந்தது. தற்போது, அங்கீகார நீட்டிப்பை யுஜிசி வழங்கியிருக்கிறது.மேலும், பல்கலைக்கழகத்துக்கு 12(பி) தகுதியைப் பெறுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்தத் தகுதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா