Skip to main content

திறந்தநிலை பல்கலை.க்கு யுஜிசி அங்கீகாரம் நீட்டிப்பு


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் கூறினார்.இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் அளித்த
பேட்டி:


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தவறான தகவலாகும்.தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி-யிடம் அங்கீகார நீட்டிப்பு பெற வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை.அதன்படி, 2015-16 ஆம் ஆண்டுக்கு அங்கீகார நீட்டிப்புக்கு பல்கலைக்கழகம் விண்ணப்பித்திருந்தது. தற்போது, அங்கீகார நீட்டிப்பை யுஜிசி வழங்கியிருக்கிறது.மேலும், பல்கலைக்கழகத்துக்கு 12(பி) தகுதியைப் பெறுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்தத் தகுதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்