Skip to main content

ஆன்லைன்' வேலை வாய்ப்பு மோசடிகள்! வெளிநாட்டு மோகத்தில் சிக்கும் இளைஞர்கள்!

வெளிநாட்டு மோகத்தில் சிக்கும் இளைஞர்கள், 'ஆன்லைன்' வாயிலாக வேலைவாய்ப்பு தேடி, லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருக்க, 'சைபர்' கிரைம் போலீசார்அறிவுறுத்தி
யுள்ளனர்.


தற்போதைய சூழலில், நாடு முழுவதும் 'சைபர்' குற்றங்கள் தான் அதிகளவு நடந்துவருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் வளர, அதன் மூலம் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன. சமூக வலைதளங்களில், ஒவ்வொருவரும் தங்களை பற்றிய முழுமையான தகவல்களை பதிவு செய்வதால், பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக, பெண்களும், குழந்தைகளும் சமூக வலைதளங்களில் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இதேபோன்று இணையதளம் மூலம் பண பரிவர்த்தனை தொடர்பான குற்றங்களும் அதிகரித்துள்ளன. கோவையில், கடந்த சில ஆண்டுகளாக 'ஆன்லைன்' மூலம் மோசடி செய்வது, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் பறிப்பது கணிசமாக அதிகரித்து வருகின்றது.


இ--மெயில் வாயிலாக


லாட்டரியில் பணம் விழுந்திருப்பதாக சொல்லி, மோசடிகள் நடக்கின்றன. குழந்தைகளிடம் போனில் பேசி, அவர்களது பெற்றோரின் தகவல்களை பெற்று, மோசடியில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. கோவை மாநகரில், கடந்தாண்டு 'நெட்' பேங்கிங், ஆன்லைன் மோசடி தொடர்பாக, ௨௫ வழக்குகள் பதிவான நிலையில், நடப்பாண்டு எட்டு மாதங்களில் மட்டும், 72 வழக்குள் பதிவாகியுள்ளன.'ஆன்லைன்' லாட்டரி மோசடிகள் தொடர்பாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. 'ஆன்லைன்' வாயிலாக, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து மோசடி செய்வது தொடர்பாக கடந்தாண்டு ஆறு வழக்குகள் பதிவாகியிருந்தன. நடப்பாண்டு ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக, 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன


.மாநகர 'சைபர்' கிரைம் போலீசார் கூறுகையில், 'வெளிநாட்டு மோகத்தில் இளைஞர்கள் முன்னெச்சரிக்கை இன்றி பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர். சிலர் தற்கொலை செய்த சம்பவங்களும் உள்ளன. இதுபோன்ற மோசடி நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால்,சைபர் கிரைம் போலீசாரை அணுகலாம். சமூக வலைதளங்களில் என்னென்ன தகவல்களை வெளியிட வேண்டும்; எதை வெளியிட கூடாது என்ற விழிப்புணர்வு இருப்பது அவசியம்'' என்றனர். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு