Skip to main content

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்த முடிவுதுணை ஆணையர் ஸ்ரீதரன் தகவல்

வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை 4 கோடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என வருமான வரித்துறை துணை ஆணையர் (புலனாய்வு) ஸ்ரீதரன் கூறினார்.காரைக்குடி அழகப்பா பல்கலையில் போட்டி தேர்வுமாணவர்களுக்கான ஒரு நாள்
கருத்தரங்கில் அவர் பேசியதாவது: விடா முயற்சியே போட்டி தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி. நான் மூன்று முறை முதல் நிலை தேர்வில் தோல்வியடைந்தேன். நான்காம் முறை ஐ.பி.எஸ்., தேர்வானேன். மேற்கு வங்கத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததால் அதில் சேராமல் தொடர்ந்து முயற்சி செய்து 2010-ல் ஐ.ஆர்.எஸ்.,-க்கு தேர்வானேன். ஒரு முறை தோற்றால் சோர்ந்து விடக்கூடாது. தன்னம்பிக்கை வேண்டும்.
வருமான வரி ஏய்ப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது. மக்கள் செலுத்தும் வரி நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 
தமிழகத்தில் கடந்த 2014--15-ல் ஆயிரம் கோடிக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி வரை வரியாக வசூலிக்கப்
பட்டுள்ளது.இந்தியா முழுவதும் இந்த ஆண்டு ரூ.8 லட்சம் கோடிக்கு வரி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 2.5 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துபவர்களாக உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை 4 கோடியாக உயர்த்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.போட்டி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்மையாக பணியாற்ற வேண்டும். ஊழல் என்பது நம்முடைய கலாசாரமாக மாறி விட்டது. பெற்றோர் பிள்ளைகளுக்கு ஊழலற்ற நிர்வாகத்தை சொல்லி கொடுக்க வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில் பல்கலை துணைவேந்தர் சுப்பையா, பதிவாளர் மாணிக்கவாசகம், பேராசிரியர்கள் மணிசங்கர், நாராயணமூர்த்தி, பாலகிருஷ்ணன், அழகப்பா பல்கலை கல்வி வட்ட இயக்குனர் சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.-

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு