Skip to main content

சான்றிதழ் சரிபார்ப்பு இல்லாமலே பணிநியமன ஆணை: டி.என்.பி.எஸ்.சி

TNPSC:சான்றிதழ் சரிபார்ப்பு இல்லாமலே பணிநியமன ஆணை: டி.என்.பி.எஸ்.சி தளத்தில் புதியமுறை அறிமுகம்
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் "candidate's dash board" என்ற சுய விவர பக்கம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி-யின் தலைவர் பொறுப்பிலுள்ள பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், கூறியிருப்பதாவது:


டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் "candidate's dash board" அமல்படுத்தப்படவுள்ளது. முதலாவதாக இதன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்படும்காலதாமத்தை தவிர்க்க முடியும். ஏன் என்றால் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் சான்றிதழ்களை அவர்களே பதிவேற்றம்(upload) செய்துவிடாலாம். இதனால் அவர்களைமீண்டும் அழைத்து சான்றிதழ் சரிபார்க்கும் வேலை எங்களுக்கு இல்லை.இரண்டாவது ஆன்லைன் விண்ணப்பத்தில்(application) ஒரு தகவல்களை சொல்லிவிட்டு சான்றிதழ் சரிபார்ப்பின் போது மற்றொன்றை எடுத்துவருவார்கள். எனவே அதில் ஏற்படும் தவறுகள் எல்லாம் தவிர்க்கப்படும்.மூன்றாவதாக இலவசமாக கொடுக்கக்கூடிய(free chance) வாய்ப்புகளை கண்டறியமுடியும்.


உதாரணமாக முன்னாள் ராணுவத்தினருக்கு இரண்டு இலவச வாய்ப்புகள் கொடுக்கப்படும். அதற்கு மேற்பட்டு அந்த இலவச வாய்ப்புகளை தவறுதலாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு இது பயன்படும்.நான்காவதாக ஒரு தேர்வுக்கு இரண்டு அப்ளிகேசன் போடுவது தவிர்க்கப்பபடும். உதாரணமாக குரூப்1 குரூப்2 தேர்வினை எடுத்துக்கொண்டோமானால், விண்ணப்பதாரர்கள் ஒரு பதவிக்கு இரண்டு முறை விண்ணப்பிப்பது. ஒன்று கட்டணம் செலுத்தி விண்ணப்பிப்பது, மற்றொரு விண்ணப்பத்தில் கட்டணம் கட்டாமல் விண்ணப்பிப்பது, உள்ளிட்ட தவறுகள் தவிர்க்கப்படும் என்றார்.விண்ணப்பதாரர் சுய விவர பக்கம் ("candidate's dash board") அடுத்த 10 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே சான்றிதழ்களை பதிவேற்றம்(upload) செய்து கொள்ளலாம் என்றார்.​ 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா