Skip to main content

சான்றிதழ் சரிபார்ப்பு இல்லாமலே பணிநியமன ஆணை: டி.என்.பி.எஸ்.சி

TNPSC:சான்றிதழ் சரிபார்ப்பு இல்லாமலே பணிநியமன ஆணை: டி.என்.பி.எஸ்.சி தளத்தில் புதியமுறை அறிமுகம்
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் "candidate's dash board" என்ற சுய விவர பக்கம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி-யின் தலைவர் பொறுப்பிலுள்ள பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், கூறியிருப்பதாவது:


டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் "candidate's dash board" அமல்படுத்தப்படவுள்ளது. முதலாவதாக இதன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்படும்காலதாமத்தை தவிர்க்க முடியும். ஏன் என்றால் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் சான்றிதழ்களை அவர்களே பதிவேற்றம்(upload) செய்துவிடாலாம். இதனால் அவர்களைமீண்டும் அழைத்து சான்றிதழ் சரிபார்க்கும் வேலை எங்களுக்கு இல்லை.இரண்டாவது ஆன்லைன் விண்ணப்பத்தில்(application) ஒரு தகவல்களை சொல்லிவிட்டு சான்றிதழ் சரிபார்ப்பின் போது மற்றொன்றை எடுத்துவருவார்கள். எனவே அதில் ஏற்படும் தவறுகள் எல்லாம் தவிர்க்கப்படும்.மூன்றாவதாக இலவசமாக கொடுக்கக்கூடிய(free chance) வாய்ப்புகளை கண்டறியமுடியும்.


உதாரணமாக முன்னாள் ராணுவத்தினருக்கு இரண்டு இலவச வாய்ப்புகள் கொடுக்கப்படும். அதற்கு மேற்பட்டு அந்த இலவச வாய்ப்புகளை தவறுதலாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு இது பயன்படும்.நான்காவதாக ஒரு தேர்வுக்கு இரண்டு அப்ளிகேசன் போடுவது தவிர்க்கப்பபடும். உதாரணமாக குரூப்1 குரூப்2 தேர்வினை எடுத்துக்கொண்டோமானால், விண்ணப்பதாரர்கள் ஒரு பதவிக்கு இரண்டு முறை விண்ணப்பிப்பது. ஒன்று கட்டணம் செலுத்தி விண்ணப்பிப்பது, மற்றொரு விண்ணப்பத்தில் கட்டணம் கட்டாமல் விண்ணப்பிப்பது, உள்ளிட்ட தவறுகள் தவிர்க்கப்படும் என்றார்.விண்ணப்பதாரர் சுய விவர பக்கம் ("candidate's dash board") அடுத்த 10 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே சான்றிதழ்களை பதிவேற்றம்(upload) செய்து கொள்ளலாம் என்றார்.​ 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு