Skip to main content

தவறுதலாக இடத்தை ஒப்படைத்த மாணவிக்கு எம்பிபிஎஸ் சேர்க்கை

தவறுதலாக இடத்தை ஒப்படைத்த மாணவிக்கு எம்பிபிஎஸ் சேர்க்கை
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடத்தை தவறுதலாக ஒப்படைத்த மாணவிக்கு அதே கல்லூரியில் சேர்க்கை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 இதுதொடர்பாக அப்சரா என்ற மாணவி தாக்கல் செய்த மனு விவரம்:

 எனது சொந்த ஊர், கேரள மாநிலம், பாலக்காடு ஆகும். எனக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அந்த மருத்துவக் கல்லூரி டீன் எனக்கு சேர்க்கை வழங்கினார். அப்போது, இரண்டாவது, மூன்றாவது கட்டக் கலந்தாய்வில் பங்கேற்க எனக்கு விருப்பமுள்ளதா என என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு விருப்பமுள்ளதாக நானும் பதிலளித்தேன்.
 மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான கட்டணத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதி செலுத்திய பிறகு, அந்தக் கல்லூரியில் சேர்க்கை வழங்கப்பட்டது.
 இந்த நிலையில், அடுத்தகட்டக் கலந்தாய்வுகளில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததை ரத்து செய்ய விரும்பினேன். கம்ப்யூட்டரில் அதைச் செய்து கொண்டிருந்த நிலையில், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வெளியில் சென்று வந்தேன். அப்போது, எனது சகோதரி தவறுதலாக எம்பிபிஎஸ் இடத்தை ஒப்படைக்கும் பட்டனை சொடுக்கிவிட்டார். இது எனக்கு தெரியாது.
 மருத்துவக் கல்லூரி, விடுதிகளில் சேருவதற்காக செப்டம்பர் 3-ஆம் தேதி தேனிக்குச் சென்றபோது, எனது இடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் அதிர்ச்சி அளித்தது.
 அந்த இடம் இப்போது 2-ஆம் கட்ட கலந்தாய்வுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறியாமையால் திரும்ப ஒப்படைக்கப்பட்ட எம்பிபிஎஸ் இடத்தை எனக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறி மத்திய சுகாதாரத் துறை டைரக்டர் ஜெனரலுக்கு இமெயில் அனுப்பினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 அகில இந்திய அளவில் மூன்றாவது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, இந்த இடத்தை மீண்டும் எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரினார்.
 இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 அப்போது, அகில இந்திய அளவில் நடைபெற உள்ள மூன்றாவது கட்டக் கலந்தாய்வில் இந்த மாணவிக்கு ஓர் இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
 இது தொடர்பாக, அரசின் கருத்தறிந்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு வழக்குரைஞருக்கும் அவர் உத்தரவிட்டார்.
 இந்த மாணவி மூன்றாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்க தடையில்லை என்றும், அவருக்கு வழங்கப்பட்ட எம்பிபிஎஸ் இடம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 அதற்கு, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கலந்தாய்வில் பங்கேற்று இடத்தையும் மனுதாரர் ஏற்கெனவே தேர்வு செய்துவிட்டார். அத்துடன், அந்தக் கல்லூரியில் சேருவதற்கான கட்டணத்தையும் செலுத்திவிட்டதால், அவர் அந்தக் கல்லூரியின் மாணவியாகிவிட்டார். 
 எனவே, அவர் விரும்பினாலும் கூட அந்த இடத்தை ஒப்படைப்பது தொடர்பான கேள்வியே எழவில்லை என்று வாதிட்டார்.
 விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரருடைய வழக்குரைஞரின் வாதத்தில் நியாயம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. மனுதாரரிடம் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, மாணவியாகச் சேர்த்துக் கொண்ட பிறகு, தொழில்நுட்பக் காரணங்களுக்காக அவரை தண்டிக்கக் கூடாது. எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான இணைய வழிமுறை இந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அதைப் புரிந்துகொள்வதில் மாணவிக்கு சிரமங்கள் இருந்திருக்கலாம். தேனி மருத்துவக் கல்லூரியில் அவரிடம் சேர்க்கைக் கட்டணம் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரை மீண்டும் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறிவுறுத்த நீதிமன்றம் விரும்பவில்லை. மனுதாரரை கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவியாகக் கருத வேண்டும். மாணவி சேர்க்கப்பட்ட பிறகு அந்த இடத்தை காலியிடமாகக் கருதி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்க முடியாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு