தமிழக பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்,மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள்
குறித்த விபர ங்களை, அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சில பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையேயான கோஷ்டியை சமாளித்தல், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை மனதில் வைத்துஇடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வை சிலர் பதவியை தவிர்த்தனர்.
இதன் காரணமாக தலைமை ஆசிரியர் பணியிடம் சில இடங்களில் நிரம்பாத நிலை உருவானது. இந் நிலையில் உயர்,மேல்நிலை பள்ளிக்கான தரம் உயர்வு பட்டியல் அறிவிப்பு இன்னும் வெளியாகாத சூழலில், தலைமை ஆசிரியர் காலி யிடம் சேகரிப்பு பதவி உயர்வை விரும்புவோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.