Skip to main content

டி.இ.ஓ., பதவி உயர்வில் விரும்பிய இடங்கள்! கல்வித்துறை திடீர் 'கரிசனம்'

கல்வித் துறையில் மாநில அளவில், 70க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருந்தன. டி.இ.ஓ., பதவி உயர்வு 'பேனல்' ரெடியாக இருந்தபோதும் காரணமே தெரியாமல் பதவி உயர்வு அளிப்பதில் இழுத்தடிக்கப்பட்டது. இதனால், டி.இ.ஓ., பதவியே கிடைக்காமல் தலைமையாசிரியர் பலர் ஓய்வு பெறும் சூழ்நிலை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 52 பேருக்கு பதவி உயர்வு அளித்து கல்வித் துறை உத்தரவிட்டது. ஆனால், 80 பேர் 'பேனலில்' இருந்தபட்சத்தில், 76 காலியிடங்களுக்கு 52 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதனால், மீதமுள்ள பலர், ஓய்வு பெறும் வயதில் உள்ளதால் அவர்களின் டி.இ.ஓ., கனவு நிறைவேறாமல் போயுள்ளது.வழக்கமாக, டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வின் போது, தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வடக்கிலும், வட மாவட்டத்தினருக்கு, தெற்கிலும் பணியிடம் ஒதுக்கி, அலைக்கழிப்பது கல்வித்துறையில், பல ஆண்டு வழக்கம். ஆனால், இந்தாண்டு பெரும்பாலும் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் 'செலவில்லாமல்' பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
கல்வித்துறையில் அதிகாரிகள் பதவி உயர்வு என்றாலே, துாரத்தில் உள்ள மாவட்டங்களில் தான் பணியிடங்கள் ஒதுக்கப்படும். அதன்பின் 'கவனிக்க வேண்டியவர்களை கவனித்து' மீண்டும் சொந்த மாவட்டத்திற்கு பணிமாற்றம் பெறுவர். ஆனால், தற்போதைய இயக்குனர் கண்ணப்பனின் முயற்சியால், பலருக்கும் சொந்த மாவட்டங்களிலேயே, பணியிடங்கள் கிடைத்துள்ளன.மதுரையை சேர்ந்த துரைப்பாண்டிக்கு பரமக்குடி ஒதுக்கப்பட்டது. ஆனால், மதுரை மாவட்டத்தில் மேலுார் காலியாக இருந்ததால், கல்வித்துறையே முன்வந்து அவருக்கு மேலுாரை ஒதுக்கியது. இவர்களில் பலர், ஒருசில மாதங்களில் ஓய்வுபெறும் நிலை உள்ளதால், அவர்களுக்கு கல்வித்துறை சிறப்பு 'கரிசனம்' காட்டியுள்ளது. இது வரவேற்கத்தக்கது, என்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா