Skip to main content

Automatic EB Bill Reading Machine!

 தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை கணக்கிட, 'ஆட்டோமேட்டிக் ரீடிங் மீட்டர்' பொருத்த, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, தொழிற்சாலை, ஜவுளி ஆலை, ஐ.டி., நிறுவனங்கள் என, 8,200 உயரழுத்த மின் இணைப்புகள் உள்ளன.


முறைகேடு:

இவற்றில், தற்போது, 'டைம் ஆப் டே' என்ற மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மீட்டரில் ஒவ்வொரு, 15 நிமிடமும் பயன்படுத்திய மின்சார அளவு பதிவாகும்.உதவி பொறியாளர், மாதந்தோறும், நேரடியாக சென்று, மின் பயன்பாட்டை கணக்கு எடுப்பார். ஏழு நாட்களுக்குள், மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால், மின் வாரிய அதிகாரிகள் மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கும் போது, நுகர்வோருடன் கூட்டு சேர்ந்து, முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, 'ரேடியோ பிரிக்யூன்சி மீட்டர்' பொருத்த முடிவு செய்யப்பட்டது.இந்த மீட்டரில், 'சிம் கார்டு' பொருத்தப்படும். ஊழியரிடம், 'ரிமோட்' கருவி வழங்கப்படும்.அதை அவர், ஒரு தெருவிற்குள் எடுத்து சென்றால், அங்கு வசிப்பவர்கள் பயன்படுத்திய மின்சார அளவு, அவர்களின் மீட்டரில் இருந்து, அதிர்வலை மூலம் நேரடியாக கருவியில் பதிவாகும்.
பின், அலுவலகம் சென்று, கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்யலாம். இதை, சோதனை செய்த போது, பல பிரச்னைகள் ஏற்பட்டன.இதையடுத்து, உயரழுத்த மின் இணைப்பில், ஆட்டோமேட்டிக் ரீடிங் மீட்டர் பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது.


இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆட்டோமேட்டிக் ரீடிங் மீட்டர் என்பது, 'சிம் கார்டு' உள்ள மீட்டர். இது, மின் வாரிய தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலக சர்வருடன் இணைக்கப்படும்.

மென்பொருள்:

அதில், மின் பயன்பாடு கணக்கிடும் முறை; கணக்கு எடுக்க வேண்டிய தேதியை மென்பொருளாக தயாரித்து, பதிவு செய்தால் போதும். நேரடியாக சென்று, மீட்டரில் கணக்கு எடுப்பதற்கு பதில், அந்த விவரம், 'சர்வர்' மூலம், மின் வாரிய அலுவலக கம்ப்யூட்டரில் பதிவாகும். அதை, நுகர்வோருக்கு, இ - மெயில் அல்லது எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பினால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.

2,000 கோடி யூனிட்:

தமிழகத்தில் வீடு, வணிகம் உள்ளிட்ட மின் இணைப்புகளின் மொத்த பயன்பாடு, ஆண்டுக்கு, 7,000 கோடி யூனிட். இதில், உயரழுத்த மின் இணைப்புகளின் பங்கு, 2,000 கோடி யூனிட்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்