Skip to main content

கவுன்சிலில் பதிவு செய்யாததால் 915 நர்சுக்கு வேலை 'அவுட்'


மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், 915 பட்டதாரிகள், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யாததால், அவர்களின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்துள்ளது.

தமிழக பொது சுகாதாரத் துறையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதிகாரி பணிக்கான, 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 20ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கான அனுமதிச் சீட்டு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்பித்தவர்களில், 44 பேருக்கு சரியான கல்வித் தகுதியில்லாததால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், கல்வித்தகுதி இருந்தும், 915 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அதில், 'தேர்வு எழுத தேவையான கல்வித் தகுதியான, பி.எஸ்சி., நர்சிங் படித்திருந்தும், 915 பேரும், அரசு வேலைக்கான நர்சிங் கவுன்சிலில் தங்களின் பட்டப்படிப்பை பதிவு செய்யவில்லை. 

அதனால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன' என, தெரிவித்துள்ளது. நர்சிங் முடித்தவர்கள், அரசுப் பணியில் சேர, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும் என்பது, தமிழக செவிலியர் பணிகள் சட்டப்படி கட்டாயமாகும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா