Skip to main content

ஐஏஎஸ் தேர்வு அரசு இலவசப் பயிற்சி! அக்.6க்குள் விண்ணப்பிக்க வேண்டும்…


         தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு இலவசப் பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு தமிழக அரசு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விண்
ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


            பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32. பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.முழு நேரம் விடுதியில் தங்கியிருந்து பெறும் பயிற்சிக்கு 225 பேரும், பகுதி நேர பயிற்சிக்கு 100 பேரும் தேர்வுசெய்யப்படுவர். விடுதியில் தங்கியிருந்து பயிற்சி பெறுவோருக்கு இலவச பயிற்சி, தங்கும் வசதி, உணவு அளிக்கப்படும். தகுதியானநபர்கள் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். நுழைவுத் தேர்வு நவம்பர் மாதம் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறும். இதில் பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.நுழைவுத்தேர்வு எழுதுவதற் கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்த அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ராஜா அண்ணாமலைபுரம் பி.எஸ்.குமாரசாமி சாலையில் உள்ள (காஞ்சி கட்டிடம்) அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் விண்ணப்பத்தைப் பெற்று அங்கு சமர்ப்பிக்க வேண்டும்.நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டு http://www.civilservicecoaching.com/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப் படும். அதிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுச் சீட்டு, வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பப்படமாட்டாது. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப படிவங் களை அக்டோபர் 6-ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.