Skip to main content

ஐஏஎஸ் தேர்வு அரசு இலவசப் பயிற்சி! அக்.6க்குள் விண்ணப்பிக்க வேண்டும்…


         தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு இலவசப் பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு தமிழக அரசு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விண்
ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


            பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32. பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.முழு நேரம் விடுதியில் தங்கியிருந்து பெறும் பயிற்சிக்கு 225 பேரும், பகுதி நேர பயிற்சிக்கு 100 பேரும் தேர்வுசெய்யப்படுவர். விடுதியில் தங்கியிருந்து பயிற்சி பெறுவோருக்கு இலவச பயிற்சி, தங்கும் வசதி, உணவு அளிக்கப்படும். தகுதியானநபர்கள் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். நுழைவுத் தேர்வு நவம்பர் மாதம் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறும். இதில் பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.நுழைவுத்தேர்வு எழுதுவதற் கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்த அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ராஜா அண்ணாமலைபுரம் பி.எஸ்.குமாரசாமி சாலையில் உள்ள (காஞ்சி கட்டிடம்) அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் விண்ணப்பத்தைப் பெற்று அங்கு சமர்ப்பிக்க வேண்டும்.நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டு http://www.civilservicecoaching.com/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப் படும். அதிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுச் சீட்டு, வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பப்படமாட்டாது. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப படிவங் களை அக்டோபர் 6-ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு