Skip to main content

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் 63 புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் 63 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதாக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:



தொலைதூரக் கல்வி திட்டத்தின் கீழ் படிப்புகள் வழங்கும் பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி-யின் தொலைதூரக்கல்வி அமைப் பானது ஆண்டுதோறும் அங்கீ காரத்தை புதுப்பிப்பது வழக்கம். அந்தவகையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் 2015-16-ம் கல்வி ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.பொதுவாக, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தால் அந்த பட்டம் செல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது. அது தவறு.10-ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்துவிட்டு பட்டப் படிப்பில் சேர்ந்து படித்தால் அவர்களின் பட்டம் உலகில் எங்கு சென்றாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.எனவே, திறந்தநிலை பல்கலைக்கழக படிப்புகளைக் கண்டு மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். இந்த ஆண்டு புதிதாக 63 பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.


அவற்றில் 5 இளங்கலை, 19 முதுகலை பட்டப்படிப்புகள், 40 சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் ஆகும்.எங்கள் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 10-ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற உள்ளது. இதில் 15 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.இவ்வாறு துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் கூறினார். பேட்டியின்போது பதிவாளர் எஸ்.விஜயன் உடனிருந்தார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு