Skip to main content

சென்னைப் பல்கலைக்கழகத்தில் அக்.3-இல் வேலைவாய்ப்பு முகாம்

 இளநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை சென்னைப் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு பதி
வுக் கட்டணம் எதுவும் கிடையாது.


இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: 


2013, 2014, 2015 ஆகிய மூன்று ஆண்டுகளில் இளநிலை கலை, அறிவியல் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். விருப்பமுள்ள மாணவர்கள் பெயர்களைப் பதிவு செய்வது அவசியம்.பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 1,200 மாணவர்களை பணிக்காகத் தேர்வு செய்ய உள்ளன. முகாம் மூலம் அளிக்கப்படும் பணிகள் அனைத்தும் ரூ. 8ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை மாத ஊதியம் கிடைக்கக் கூடிய பகல் நேரப் பணிகளாகவே இருக்கும்.


மேலும் விவரங்களுக்கு 95516 90630, 95516 90631ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா