Skip to main content

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் 3,000 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் உயர்த்துதல், பணி நிரந்தரம், பதவி உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள்
தொடர்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், சத்துணவு ஊழியர்கள் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி திங்கள்கிழமை ஊர்வலமாகப் புறப்பட்டனர். இவர்களை எழும்பூர் லாங்க்ஸ் கார்டன் சாலை அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.பின்னர் சங்கப் பிரதிநிதிகள் அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாததால் அவர்கள் தலைமைச் செயலக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையறிந்த ஊழியர்கள் எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டனர். இவர்களை போலீஸார் தடுத்ததால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடியும் நடத்தினர்.இதையடுத்து, சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சமூக நலக் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா