Skip to main content

வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் 25 அரசு பள்ளிகளில் துவங்க ஏற்பாடு


25 அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு கல்வியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. குறிப்பாக, எளிய முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வசதியாக மெய் நிகர் வர்க்கம்
வகுப்பறை (வெர்ச்சுவல் கிளாஸ்) என்ற திட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில், மாநில ஆசிரியர் பயிற்சி கல்வி மையம் மூலமாக மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்ததிட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில், காரைக்காடு, குள்ளஞ்சாவடி, லால்பேட்டை, சி.முட்லுார், மஞ்சக்குப்பம், மஞ்சக்கொல்லை, நடுவீரப்பட்டு, வல்லத்துறை, கம்மாபுரம், கஞ்சங்கொல்லை, முட்டம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகள், திட்டக்குடி, விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம், பேர்பெரியாங்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேப்பூர் மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஆடூர் அகரம், கீரப்பாளையம், கண்டரக்கோட்டை, எறுமனுார், அம்பலவாணன்பேட்டை, அங்குசெட்டிப்பாளையம், கவரப்பட்டு, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளி, தொழுதுார் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி என, மொத்தம் 25 பள்ளிகளில் வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்காக பிராட் பேன்ட் இணைப்பு வசதியை ஏற்படுத்துமாறு அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் 25 அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


இத்திட்டத்திற்குத் தேவையான பிராட் பேன்ட் இணைப்பு வசதி பெரும்பாலான பள்ளிகளில் உள்ளது. சில பள்ளிகளில் மட்டுமே இவை இல்லை. பிராட் பேன்ட் வசதி இல்லாத பள்ளிகளில் அந்த வசதியை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.புரொஜக்டர், ஸ்கிரீன் என, பல்வேறு உபகரணங்கள் படிப்படியாக வர உள்ளது. பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் நடத்தப்படும். மேலும் பள்ளிக் கல்வித்துறை, மாநில ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் இருந்து பாடம் கற்பிக்கப்படும். சந்தேகங்களை மாணவர்கள் இங்கிருந்தபடியே நேரடியாக கேட்டு விளக்கம் பெறலாம்என்றார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு