Skip to main content

தகுதி தேர்வில் தேர்ச்சி இல்லை: வக்கீல் தொழில் செய்ய 2495 பேருக்கு தடை - பார் கவுன்சில் உத்தரவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2010-ம் ஆண்டுக்கு பிறகு சட்டம் படித்து வக்கீலாக பதிவு செய்துள்ளவர்கள், வக்கீலாக பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 2 ஆண்டுக்குள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுத் தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, வக்கீலாக பணி செய்யமுடியும். ஆனால், வக்கீலாக பதிவு செய்துள்ள 2,495 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. எனவே, இவர்கள் தற்காலிக வக்கீலாக பணியாற்ற தடை விதிக்கப்படுகிறது.ஐகோர்ட்டு நிர்வாக பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக வக்கீல்கள் மணிகண்டன் வதன் செட்டியார், ஆர்.மதன்குமார் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஐகோர்ட்டு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த இரு வக்கீல்கள் மீது வக்கீல் சட்டம்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதன்படி, இந்த 2 வக்கீல்கள் மீதும் எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை,இவர்கள் இருவரும் வக்கீல் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா