பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு இன்று துவங்குகிறது.
பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பள்ளி களில் படிக்காமல் தனியாகப் படித்து தேர்வு எழுதுவோருக்கு, செப்., - அக்., மாதங்களில், அரசு தேர்வுத் துறையானது, தனி
த்தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தனித்தேர்வு இன்று துவங்கி, வரும், 6ம் தேதி முடிகிறது. தமிழகம் முழுவதும், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துஉள்ளனர்.