டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், பாரதியார் பல்கலையில் அக்., மாதம் நடக்கிறது.துணை கலெக்டர், டி.எஸ்.பி, உதவி ஆணையர் வணிகத்துறை, மாவட்ட பதிவாளர் உட்பட, தமி
ழகத்தில் காலியாக உள்ள, 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள், நவ.,11ம் தேதி நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும், 2 லட்சத்து 41 ஆயிரத்து, 971 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தேர்வு எழுதுவோருக்கான முழு நேரப் பயிற்சியை வழங்க, பாரதியார் பல்கலை திட்டமிட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள், www.b--u.ac.in/news.asp எனும் பல்கலை இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, மாநில மத்திய அரசு தேர்வு பயிற்சி மையம், பாரதியார் பல்கலை, கோவை - 641 046 எனும் முகவரிக்கு, வரும் 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.