Skip to main content

வருமான வரி தொகை15 நாட்களில் கிடைக்கும்


வருமான வரி கணக்கு தாக்கலில் கூடுதலாக செலுத்திய தொகை, 7 - 15 நாட்களில் திருப்பி வழங்கப்படும்' என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.கடந்த, 2014 - 15ம் நிதியாண்டில் மாத சம்பளதாரர்கள் பெற்ற வருமானத்திற்கான வரி தொடர்பான கணக்குகளை
தாக்கல் செய்ய, இம்மாதம் 7ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது.
அதன் படி, நாடு முழுவதும், 2.06 கோடி பேர் தங்களின் வருமான விவரங்களையும், வரியையும், 'ஆன்லைன்' முறையில், வருமான வரி இணையதளம் மூலம் தாக்கல் செய்துள்ளனர்.செலுத்திய வரித்தொகை கூடுதலாக இருப்பின், அதை திருப்பி அனுப்ப, முன்னர், பல மாதங்கள் முதற்கொண்டு, சில ஆண்டுகள் வரை ஆகியது. ஆனால், இப்போது, ஆன்லைன் முறையில், வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப் படுவதால், அவை கம்ப்யூட்டர் மூலம், உடனுக்குடன்சரிபார்க்கப்படுகின்றன.இதனால், கூடுதலாக செலுத்தியுள்ள வருமான வரித் தொகையை, குறைந்தபட்சம் ஏழு நாட்கள் முதல், 15 நாட்களுக்குள் திரும்பப் பெறலாம்.

இதற்கான வசதி, பெங்களூரில் உள்ள, சி.பி.சி., எனப்படும் மத்திய பகுப்பாய்வு மையத்தில் புதிதாக
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள கம்ப்யூட்டர் வசதி மூலம், ஒரு நிமிடத்திற்கு, 3,475 கணக்குகளை சரிபார்க்க முடியும். அவற்றில், 45.18 லட்சம் கணக்குகள் சரிபார்க்கப்
பட்டு, 22.14 லட்சம் பேருக்கு, அவர்கள் கூடுதலாக செலுத்திய தொகை, இந்த
மாதத்திலேயே திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோரால் கூடுதலாக செலுத்தப்பட்ட தொகை, அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இப்போது பின்பற்றப்படும் புதிய முறையில், வரி செலுத்துவோரின், 'ஆதார்' எண் அல்லது வங்கிக்கணக்கு எண் போன்றவற்றின் அடிப்படையில், அவர்களின் வரவு, செலவுகள் சரிபார்க்கப்படுகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்