Skip to main content

வருமான வரி தொகை15 நாட்களில் கிடைக்கும்


வருமான வரி கணக்கு தாக்கலில் கூடுதலாக செலுத்திய தொகை, 7 - 15 நாட்களில் திருப்பி வழங்கப்படும்' என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.கடந்த, 2014 - 15ம் நிதியாண்டில் மாத சம்பளதாரர்கள் பெற்ற வருமானத்திற்கான வரி தொடர்பான கணக்குகளை
தாக்கல் செய்ய, இம்மாதம் 7ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது.
அதன் படி, நாடு முழுவதும், 2.06 கோடி பேர் தங்களின் வருமான விவரங்களையும், வரியையும், 'ஆன்லைன்' முறையில், வருமான வரி இணையதளம் மூலம் தாக்கல் செய்துள்ளனர்.செலுத்திய வரித்தொகை கூடுதலாக இருப்பின், அதை திருப்பி அனுப்ப, முன்னர், பல மாதங்கள் முதற்கொண்டு, சில ஆண்டுகள் வரை ஆகியது. ஆனால், இப்போது, ஆன்லைன் முறையில், வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப் படுவதால், அவை கம்ப்யூட்டர் மூலம், உடனுக்குடன்சரிபார்க்கப்படுகின்றன.இதனால், கூடுதலாக செலுத்தியுள்ள வருமான வரித் தொகையை, குறைந்தபட்சம் ஏழு நாட்கள் முதல், 15 நாட்களுக்குள் திரும்பப் பெறலாம்.

இதற்கான வசதி, பெங்களூரில் உள்ள, சி.பி.சி., எனப்படும் மத்திய பகுப்பாய்வு மையத்தில் புதிதாக
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள கம்ப்யூட்டர் வசதி மூலம், ஒரு நிமிடத்திற்கு, 3,475 கணக்குகளை சரிபார்க்க முடியும். அவற்றில், 45.18 லட்சம் கணக்குகள் சரிபார்க்கப்
பட்டு, 22.14 லட்சம் பேருக்கு, அவர்கள் கூடுதலாக செலுத்திய தொகை, இந்த
மாதத்திலேயே திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோரால் கூடுதலாக செலுத்தப்பட்ட தொகை, அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இப்போது பின்பற்றப்படும் புதிய முறையில், வரி செலுத்துவோரின், 'ஆதார்' எண் அல்லது வங்கிக்கணக்கு எண் போன்றவற்றின் அடிப்படையில், அவர்களின் வரவு, செலவுகள் சரிபார்க்கப்படுகிறது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா