Skip to main content

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1,2,4 தேர்வுகளுக்குஇலவசப் பயிற்சி வகுப்புகள்


தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப் 1,2,4, பி.எஸ்.ஆர்.பி மற்றும் வி.ஏ.ஓ. பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சிவகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன.இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்
விடுத்துள்ள அறிக்கை:


தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப் 1-க்கான தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்விற்கு அனைத்துப் பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் காலை 10 முதல்பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணியும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரித் தேர்வு நடைபெறுகிறது. எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.