Skip to main content

கல்விக் கடன் வட்டிக்கு 100 சதவீத மானியம்

கல்விக் கடன் வட்டிக்கு 100 சதவீத மானியம்: வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க அக்டோபர் 6 வரை அவகாசம்
பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருக்கும் மாணவர்களின்கல்விக் கடனுக்கு 100 சதவீத வட்டி மானியம் வழங் கப்படுகிறது. இச்சலுகையைப் பெற, பெற்றோரின் வருமானச்
சான்றிதழை அக்டோபர் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், மாணவர்களுக்கு வங்கிகள் கல்விக் கடன் வழங்கி வருகின்றன.


2008-ல் 13 லட்சம் மாணவர்கள் கல்விக் கடன் பெற்றனர். இந்த எண்ணிக்கை 2014-ல் 25.60 லட்சமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்தால், அவர்களது பிள்ளைகள் பெறும் கல்விக் கடனுக்கு 100 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை 2009-ல் அறிவித்தது. மேலும், கடன் தொகையை திருப்பிச் செலுத்த மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்து ஒருவருடம் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. படிப் புக் காலம் மற்றும் இந்த ஓராண்டு காலம் வரைமட்டுமே வட்டிக்கு 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.பெற்றோரின் வருமானம் குறித்து தாசில்தார் அளிக்கும் சான்றிதழை சமர்ப்பித்து, இச்சலுகையைப் பெறலாம். 2009 முதல் 2014 வரை வழங்கப்பட்ட கல்விக் கடனுக்கு இச்சலுகையைப் பெற மாணவர்கள் வருமானச் சான்றிதழை சமர்ப் பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.கல்விக் கடனுக்கான மானியத் தொகையை அனைத்து வங்கிகளுக் கும் அளிப்பதற்காக கனரா வங்கியை தொடர்பு வங்கியாக மத்திய அரசு நியமித்துள்ளது.


கனரா வங்கி அதிகாரிகள் கூறியபோது, ‘‘கல்விக் கடனுக்கான தொடர்பு வங்கியாக கனரா வங்கிநியமிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்விக் கடனுக்கான வட்டி மானி யத்தை மற்ற வங்கிகள் எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், பல வங்கி கள் பெறாமல் உள்ளன. இத்தொகையை பெற்றுக்கொள்ள வங்கிகளுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2009-10ல் 43.85 சதவீத மானியமும், 2013-14ல் 16.63 சதவீத மானியமும் வழங்கியுள்ளது’’என்றனர். 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.