Skip to main content

10 வகுப்பு துணைத்தேர்வுக்கான:அறிவியல் பாட செய்முறை தேர்வு 21-ம் தேதி தொடக்கம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வு வருகிற 21-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 23-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.

            பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு வருகிற 21-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 23-ம் தேதிக்குள் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  

    இத்தேர்வு அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியிலும், விருதுநகர் கல்வி மாவட்டத்திற்கு கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்திற்கு சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளியிலும் செய்முறை தேர்வு மையங்களாகும். இம்மையங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த செய்முறை பயிற்சி முடித்தவர்களை மட்டுமே அனுமதித்து, செய்முறைத் தேர்வினை சுமூகமான முறையில் நடத்தி முடிக்க வேண்டும். 

அதேபோல், செய்முறை தேர்வு மதிப்பெண்களை பெற்று குறுந்தகடில் பதிவு செய்தும், மதிப்பெண் பட்டியலையும் நேர்முத உதவி அலுவலர்(இடைநிலை) அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 என்ற முகவரியில் வருகிற 25-ம் தேதிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்கவும் அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணை இயக்குநர்  உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு