Skip to main content

10 வகுப்பு துணைத்தேர்வுக்கான:அறிவியல் பாட செய்முறை தேர்வு 21-ம் தேதி தொடக்கம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வு வருகிற 21-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 23-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.

            பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு வருகிற 21-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 23-ம் தேதிக்குள் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  

    இத்தேர்வு அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியிலும், விருதுநகர் கல்வி மாவட்டத்திற்கு கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்திற்கு சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளியிலும் செய்முறை தேர்வு மையங்களாகும். இம்மையங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த செய்முறை பயிற்சி முடித்தவர்களை மட்டுமே அனுமதித்து, செய்முறைத் தேர்வினை சுமூகமான முறையில் நடத்தி முடிக்க வேண்டும். 

அதேபோல், செய்முறை தேர்வு மதிப்பெண்களை பெற்று குறுந்தகடில் பதிவு செய்தும், மதிப்பெண் பட்டியலையும் நேர்முத உதவி அலுவலர்(இடைநிலை) அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 என்ற முகவரியில் வருகிற 25-ம் தேதிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்கவும் அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணை இயக்குநர்  உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா