Skip to main content

அக்.1 முதல் 2 எம்.பி. அதிவேகத்தில் இணையதள சேவை: பி.எஸ்.என்.எல். லில் அறிமுகம்


பி.எஸ்.என்.எல். இணையதள சேவையை, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 2 எம்.பி. அதிவேகத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம் என தமிழக தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளதுஇதுகுறித்து தமிழக தொலைபேசி வட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:பி.எஸ்.என்
.எல், குறைந்தபட்சம் 512 கே.பி.பி.எஸ்.(ஓக்ஷல்ள்) வேகத்தில் இணையதள சேவையை வழங்கி வருகிறது.


அதிக வாடிக்கையாளர்களை கவர, தனது இணைய தள சேவையின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.அதன்படி, பி.எஸ்.என்.எல். நிறுவன இணையதள சேவையின் வேகம் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் நொடிக்கு 2எம்பிபிஎஸ் அதிவேகத்தில் இணையதள சேவையை பி.எஸ்.என்.எல். வழங்கும். எந்தவிதமான கூடுதல் கட்டணம் இன்றி, அதிக வேகத்தில் இணையதள சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.


புதியத் திட்டம் அறிமுகம்:


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், -புது வசந்தம்- என்கிற புதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் (ப்ண்ச்ங் ற்ண்ம்ங் ஸ்ஹப்ண்க்ண்ற்ஹ்) வசதியைப் பெற முடியும்.விநாயகர் சதுர்த்தி நாளான வியாழக்கிழமை (செப் 17) முதல் திட்டம் அறிமுகமாகிறது. திட்டத்தில் உள்ளூர், வெளியூர் அழைப்புகளுக்கு வினாடிக்கு 80 பைசா வசூலிக்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு, 1,000 வினாடி அளவுக்கு இலவச அழைப்பு கிடைக்கப்பெறும். மூன்று மாதங்களுக்கு, மாதத்துக்கு 25 என்ற அளவில் குறுஞ்செய்தி, 50 எம்.பி அளவுக்கு ஒரு மாதம் இணையதள வசதி ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ. 15 செலுத்தினால் போதுமானது (சிம் கார்டு கட்டணமும் அடங்கும்). கூடுதலாக பல்வேறு சிறப்பம்சங்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு