Skip to main content

TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி? - பீனிக்ஸ் தமிழன்

TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி? - பீனிக்ஸ் தமிழன்
மதிப்பிற்குறிய நண்பர்களே,

        அரசு பணிக்கு மட்டுமே செல்ல துடிக்கும் நண்பர்களே அரசு பணிக்கு செல்வதற்கு தகுந்த திட்டமிடல் இருந்தாலே போதுமானது வெற்றி என்பது உறுதி. TNPSC  கடந்த 3 ஆண்டுகளில் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது அதற்கேற்ற முறையில் நம்மை நாமே தயா
ர் படுத்திக்கொள்ள வேண்டும்.

குரூப் 4 வெற்றி பெற வேண்டுமா

  •   சமச்சீர் கல்வி பாடத்திட்டம் கொண்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்களை படித்தாலே வெற்றி பெற முடியும்.
  •   கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த அனைத்து TNPSC தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை சேகரித்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • எந்த எந்த பாடத்தில் எவ்வளவு கேள்விகள் கேட்கப்படுகிறது. எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ஆராய வேண்டும். 


மேற்காணும் இந்த மதிப்பீடு 3 ஆண்டுகளில் நடந்த அனைத்து TNPSC  Group 2 ,2A ,Group 4 , VAO ஆகிய தேர்வுகளை  வைத்து நன்கு ஆரய்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஆகும்,

  • தமிழுக்கு மிக மிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் 100 மதிப்பெண் 6 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்க வேண்டும்.
  • கணிதம் மற்றும் காரணமறிதல் 25  கேள்விகள் உறுதி அடுத்த முக்கியத்துவம் அளித்தல் வேண்டும்
  • வரலாறு பாடத்திற்கு 3 வது முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
  • குடிமையியல் பாடத்திற்கு 4 வது முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
  • உயிரியல் மற்றும் புவியியல் பாடத்திற்கு 5 வது சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
  • இயற்பியல் மற்றும் வேதியல் பாடம் தலா 4 கேள்விகள் வரலாம் எனவே இதில் அதிகமாக மூழ்கிபோகாமல் மேற்கானும் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் நலன்
  • பொருளாதாரம் பிரிவை பொருத்தவரை 4 முதல் 8 கேள்விகள் வரும் 11 மற்றும் 12 ம் வகுப்பு பொருளாதரத்தை படிக்கவும் மேலும் தி இந்து தமிழ் மற்றும் தினமனி நாளிதழில் பொருளாதாரம் குறித்த செய்திகளை தொடர்ந்து படித்து வரவும்
  • நடப்பு நிகழ்வுகளுக்கு தி இந்து தமிழ் தினமனி போன்ற நாளிதழ்களை படிக்கவும் மேலும் வலைதளங்களில் தேடி படிக்கவும் 6 மாதங்களுக்குள் நடந்த நிகழ்வுகளே அதிக அளவில் வரும்  
  • கணினி மற்று பிற அதாவது விளையாட்டு தொழிநுட்பம் மருத்துவம் போன்றவை தினசரி நாளிதழ்களை படித்தாலே போதும்.
  • வரலாறு குடிமையியல் புவியியல் உயிரியல் போன்ற அனைத்து பகுதிகளிலும் எவ்வாறு படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும் என்பதை அடுத்து வரும் நாட்களில் பார்ப்போம்


கார்த்திக் பரமக்குடி
பீனிக்ஸ் தமிழன் 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு