Skip to main content

CTET: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான - 'சிடெட்' விண்ணப்பங்களில், திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேர, ஆசிரியர் தகுதித் தேர்வு - 'டெட்' எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி
வாரியம் - சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் பிற மாநில பள்ளிகளில் பணியாற்ற, 'சிடெட்' தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.

இந்த ஆண்டுக்கான,'சிடெட்' தேர்வு, செப்டம்பர் 20ம் தேதி, நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், அதில் உள்ள தவறுகளை திருத்தம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கு, http://ctet.nic.in/ இணைய தளத்தில், பதிவு எண்ணை பதிந்தால், விண்ணப்பத்தை பார்க்க லாம். அதில் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். இன்று முதல் வரும், 25ம் தேதி வரை, இந்த வசதி செயல்பாட்டில் இருக்கும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்