Skip to main content

முதல்முறையாக அறிமுகம்: ராணுவத்தில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம்

முதல்முறையாக அறிமுகம்: ராணுவத்தில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம் - ஆள்சேர்ப்பு மைய இயக்குநர் தகவல்
நாட்டிலேயே முதல் முறையாக ராணுவப்படை வீரர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக ராணுவ ஆள் சேர்ப்பு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரி ராணுவ ஆள் சேர்ப்பு மைய இயக்குநர் கர்னல் அவினாஷ் டி. பித்ரே வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்
களிடம் கூறியதாவது:


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலிருந்து ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 4 முதல் 13-ம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதில் 750 படைவீரர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். இதற்கான கல்வித் தகுதி 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை. வயது வரம்பு 17 முதல் 23 வரை இருத்தல் அவசியம். தேர்வு செய்யப்படும் படைவீரர்களுக்கு மாதச்சம்பளமாக ரூ.23 ஆயிரமும் மற்றும் இதர சலுகைகள், இலவச தங்குமிடம், சீருடைகள் வழங்கப்படும். பணி ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படும்.நாட்டில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 19-ம் தேதி விண்ணப் பிக்க கடைசி தேதியாகும். விண்ணப்ப படிவங்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றுள்ளன.ராணுவப்படை வீரர் பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டுமென்பதை தெரிந்துக் கொள்ள Army calling என்ற செயலி (ஆப்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கான அழைப்புக் கடிதம் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை அனுப்பி வைக்கப்படும். ராணுவத்தின்மீதுள்ள ஆர்வத்தை இளைஞர்கள் மத்தியில் தூண்டும் வகையில் ஆகஸ்ட் 19-ம் தேதி புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் ராணுவ கண்காட்சி நடைபெற உள்ளது.தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் இருந்து இதுவரை 10 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 5ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு