Skip to main content

வரும் கல்வியாண்டு முதல் ஒரு முறை தான் 'சிமேட்'

'வரும் கல்வி ஆண்டு முதல், முதுநிலை படிப்புகளுக்கான, 'சிமேட்' பொது நுழைவுத்தேர்வு, ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
இன்ஜினியரிங் முதுநிலை படிப்பில் சேர, தேசிய அளவில், 'கேட்'
தேர்வு; தமிழகத்தில், 'டான்செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல், முதுநிலை எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., போன்ற படிப்புகளுக்கு, 'சிமேட்' எனப்படும், பொது நிர்வாக திறன் தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வு, ஆண்டுக்கு, இரண்டு முறை நடத்தப்பட்டு வந்தது. வரும் கல்வியாண்டு முதல், ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
'வரும், 2016 - 17ல் மாணவர் சேர்க்கை, 'சிமேட்' தேர்வு, ஜனவரியில் நடத்தப்படும். அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டிய முறை குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும்' என, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்