Skip to main content

கல்விக்கடன் விண்ணப்பத்திற்கு புதிய இணையதளம் அறிமுகம்

மாணவர்களின் கல்விக் கடனுக்காக விசேஷ இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம், ஐந்து வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் மாணவர்களால் விண்ணப்பிக்க முடியும்; எந்த வங்கி கடன் தரத் தயாராக உள்ளதோ, அது குறித்த விவரமும்,
இந்த இணையதளத்தில் வெளியாகும்.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பார்லிமென்டில் தாக்கல் செய்து பேசிய, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'மாணவர்களின் நிதித் தேவை, கல்வி உதவித்தொகை போன்றவற்றிற்காக விசேஷமான தகவல் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஆணையம் அமைக்கப்படும்' என்றார்.

அதன் ஒரு விளைவாக, www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தை மத்திய நிதித்துறை, சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ., வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய, ஐந்து வங்கிகளுக்கு, கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்க முடியும்.

அதற்கான விண்ணப்பம், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, வங்கிக் கடன் விவரம் போன்ற அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த ஐந்து வங்கிகளுடன், மேலும், 13 வங்கிகள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளன. விரைவில் அனைத்து வங்கிகளும் இந்த இணையதளத்தில் சேரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா