Skip to main content

தலைமை ஆசிரியர் பதவி உயர்வை கலந்தாய்வில் தவிர்த்த ஆசிரியர்கள்

பணிச்சுமை,ஆசிரியர்களுக்குள் 'ஈகோ' போன்ற சில காரணத்தால் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை 40 சதவீத முதுகலை ஆசிரியர்கள் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 485 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 32 மாவட்டத்திலும் பதவி உயர்வு
மூலம் நிரப்புவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. பணி மூப்பு அடிப்படையில் 650க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். 10 சதவீதம் தவிர்த்து 90 சதவீத காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அனைத்து மாவட்ட கலந்தாய்விலும் பங்கேற்ற 40 சதவீத முதுகலை ஆசிரியர்கள் தங்களுக்கு தகுதி இருந்தும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வை தேர்வு செய்யவில்லை. விருப்பமில்லை என கடிதம் கொடுத்தனர். ' நலத்திட்ட உதவிகளை கொடுப்பது முதல், பிற ஆசிரியர்களின் பிரச்னைகளை எதிர்கொள்வது வரை பல்வேறு சிரமங்களை சந்திப்பது, பணிச் சுமை போன்றவை பதவி உயர்வை தவிர்க்கும் காரணங்களாக உள்ளன' என, கூறுகின்றனர்.

மேலும்,விரும்பிய இடம் கிடைக்காத காரணத்தாலும் சிலர் பதவி உயர்வை தவிர்த்துள்ளனர்.முதுகலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், “முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணிக்கு ஏறக்குறைய ஒரே சம்பளம். தலைமை பொறுப்பில் இருப்பதால் பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இரு பிரிவாக செயல்படுகின்றனர். இது போன்ற பிரச்னையால் தலைமை ஆசிரியர்களும் சிக்கலுக்கு ஆளாகின்றனர்.இது போன்ற காரணத்தால் பதவி உயர்விற்கு தகுதி இருந்தும்,கலந்தாய்வில் பங்கேற்று, விருப்பமில்லை என கடிதம் கொடுத்துள்ளோம்,” என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு