Skip to main content

கோவை இ.எஸ்.ஐ., கல்லூரியை ஏற்கிறது தமிழக அரசு


       கட்டுமானப் பணிகளை முடித்து ஒப்படைக்க, இ.எஸ்.ஐ., இயக்குனரகம் சம்மதித்துள்ளதால், கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியை, தமிழக அரசு ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், சென்னை மற்றும் கோவையிலும், நாடு முழுவதும், 13 இடங்களிலும், இ.எஸ்.ஐ.,
மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. நிதிச்சுமையால் நிர்வகிக்க முடியாமல் திணறிய, இ.எஸ்.ஐ., இயக்குனரகம், கல்லுாரிகளை இழுத்து மூட முடிவு செய்தது.


மாணவர்களின் தொடர் போராட்டத்தால், முடிவை மாற்றிய இயக்குனரகம், &'கல்லுாரிகள் தொடர்ந்து செயல்படும்; மாநில அரசுகள் விரும்பினால் ஒப்படைக்க தயார் என, அறிவித்தது. தமிழகத்தில் உள்ள, இரண்டு கல்லுாரிகளையும் ஏற்கும்படி, மாநில அரசை வலியுறுத்திய இயக்குனரகம், கட்டுமானப் பணி, நிலத்திற்கான பணத்தை தர வேண்டும் என, நிபந்தனை விதித்தது.

செயல்பாட்டுக்கு வராத, கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியின் கட்டுமானப் பணிகளை முற்றிலும் முடித்து கொடுத்தால், ஏற்க தயார் என, தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து, இருதரப்பிலும் பேச்சு நடந்தது. இந்நிலையில், சென்னை கே.கே.,நகர் இ.எஸ்.ஐ., கல்லுாரியை தொடர்ந்து நடந்த திட்டமிட்டுள்ள, இ.எஸ்.ஐ., இயக்குனரகம், கோவை கல்லுாரி பணிகளை முடித்து, தமிழக அரசிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது. அதே நேரத்தில், பல குறைகளைச் சுட்டிக்காட்டி, நாட்டில் உள்ள, 13 இ.எஸ்.ஐ., கல்லுாரிகளிலும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி, 580 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ள, 5 சதவீத பணிகளை முடித்து தர, இ.எஸ்.ஐ., இயக்குனரகம் சம்மதித்துள்ளதால், மாநில அரசு ஏற்று, அரசு மருத்துவக் கல்லுாரியாக நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், அங்குள்ள மருத்துவமனை, இ.எஸ்.ஐ., தொழிலாளர்களுக்கான மருத்துவமனையாக தொடர்ந்து செயல்படும்.

எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாநில அரசுக்கு - 65; மத்திய அரசுக்கு - 15; இ.எஸ்.ஐ., தொழிலாளர்களுக்கு, 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். நடைமுறைச் சிக்கல் தீர்ந்து, அடுத்த ஆண்டில், கல்லுாரி செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு