Skip to main content

கல்வித்துறையின் நடவடிக்கை:தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவால், தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சமீபகாலமாக பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களில், பள்ளி மாணவ,
மாணவியர் பங்கேற்பது அதிகரித்துள்ளது.


குடிநீர் வினியோகம், ரோடு பிரச்னை, சாக்கடை வசதியின்மை, சுகாதார சீர்கேடு போன்றவற்றை சுட்டிக்காட்டி, பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.இதுபோன்ற போராட்டங்கள் சிலவற்றில், பள்ளி சீருடையில் மாணவ, மாணவியரும் பங்கேற்கின்றனர். பெற்றோர்களுடன் ரோட்டில் அமர்ந்து, மறியலில் ஈடுபடுகின்றனர்.சமீபத்தில், "டாஸ்மாக்' மதுக்கடைகளை மூடக்கோரியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் போராட்டங்கள் நடந்தன. இதில் பல இடங்களில், மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். இதை கவனித்த பள்ளி கல்வித்துறை, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், "இதுபோன்ற போராட்டங்களால் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும்; அவர்களுக்கு அறிவுரை வழங்கி, போராட்டங்களில் பங்கேற்காமல் தவிர்க்க செய்ய வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது.இதுபோன்ற போராட்டங்களில் மாணவ,மாணவியர் ஈடுபடும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும், அதில் எச்சரிக்கப்பட்டது. பள்ளி கல்வித்துறையின் இந்த எச்சரிக்கை, தலைமை ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளி வளாகம், வகுப்பறையில் மட்டுமே மாணவ, மாணவியர் தலைமை ஆசிரியர்களின்கட்டுப்பாட்டில் உள்ளனர்; வசிப்பிடம் மற்றும் பொது இடங்களில் நடக்கும் போராட்டங்களில், மாணவ, மாணவியர் பங்கேற்றால், அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் எவ்வகையில் பொறுப்பேற்க முடியும் என, கேள்வி எழுப்புகின்றனர்.சில பெற்றோரே, குழந்தைகளை போராட்ட களத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களை ஊக்கப்படுத்துகின்றனர். எனவே, மாணவர்கள்போராட்ட பிரச்னையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை, அதிருப்தி அளிப்பதாக, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு