Skip to main content

மாணவனுக்கு கல்விக் கடன்: உயர்நீதிமன்றம் உத்தரவு

'நாகர்கோவில் ஏழை மாணவன் உயர்கல்விக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும்,' என வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.நாகர்கோவில் பீமநகரி சுப்பிரமணியன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பி.இ.,முடித்துள்ளார். எம்.டெக்.,(சூரிய
மின்சக்தி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

சென்னையில் ஒரு பல்கலையில் சேர கல்வி மற்றும் இதரக் கட்டணம் 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் அனுமதிக்குமாறு, நாகர்கோவில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளையில் சுப்பிரமணியன் விண்ணப்பித்தார். வங்கி நிர்வாகம் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அனுமதித்தது. கோரிய முழுத் தொகையையும் வழங்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றக் கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் தாயுமானசாமி ஆஜரானார்.வங்கி நிர்வாகம்,'அரசு நிர்ணயித்ததைவிட மனுதாரர் அதிகத் தொகை கோரியுள்ளார்,' என தெரிவித்தது.நீதிபதி,“ நன்றாக படிக்கும் ஏழை மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடக்கூடாது என்ற நோக்கில், அரசு கல்விக் கடன் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. வங்கி நிர்வாகம் கூறுவது ஏற்புடையதல்ல. மனுதாரர் கோரிய தொகையை 2 வாரங்களில் வழங்க வேண்டும்,” என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு