Skip to main content

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம்

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் கடிதம் ஒன்றை
அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-


* பள்ளிக்கூட நேரம் முடிந்ததும் மாணவ-மாணவிகள் நேராக வீட்டுக்கு செல்லவேண்டும் என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துதல்.


* கடல், குளத்தில் மாணவர்கள் குளிக்கக்கூடாது


* கடல், ஏரி, குளம், குட்டை ஆகிய எந்த நீர் நிலைகளிலும் மாணவ-மாணவிகளை குளிக்கக்கூடாது என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தவேண்டும்.


* பள்ளிக்கூடங்களில் புதர்கள், பழைய மரங்கள் விழும் நிலையில் இருந்தால் அவற்றைஅகற்றுதல்.


* மாணவ-மாணவிகள் நீர் நிலைகளுக்கு செல்லக்கூடாது என்று ஆசிரியர்கள் கூறவேண்டும்.


* பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தொட்டிகள், கழிவு நீர் தொட்டிகள் மூடப்பட்ட நிலையில் இருக்கவேண்டும். அவை மூடப்பட்டு இருக்கின்றனவா? என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்தல்.


* இடி, மின்னல் போன்றவற்றில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களை பாதுகாக்க அவர்களைமரங்கள் அடியில் ஒதுங்கக்கூடாது என்று சொல்லுதல்.


* பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மின்சார சுவிட்சுகள் சரியாக உள்ளனவா? என்பதை தலைமை ஆசிரியர் சரிபார்க்கவேண்டும்.


* பழுதடைந்த மின் கம்பிகளை தொடக்கூடாது, பழுதடைந்த மின்கம்பங்கள் அருகே நிற்கக்கூடாது என்று மாணவ-மாணவிகளிடம் அறிவுறுத்துதல்.


* கூடிய மட்டும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இறை வணக்க கூட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு மேற்கண்ட அறிவுரைகளை வழங்கவேண்டும்.


இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா