Skip to main content

மருத்துவம், பொறியியல் சேர்க்கை; எஸ்.சி., பிரிவினருக்கு கவுன்சிலிங்

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர, எஸ்.சி., பிரிவினருக்கான சென்டாக்கவுன்சிலிங், இன்று 14ம் தேதி நடக்கிறது. தொழிற்கல்வி சேர்க்கையில் இட ஒதுக்கீடு கேட்டு, குடியேறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்து சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டது.


ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், கவுன்சிலிங் நடத்துவதில் மேலும் கால தாமதமாகலாம் என்பதால், சென்டாக் நிர்வாகம் உடனடியாகஆதிதிராவிடர் மாணவர்களுக்கான சென்டாக் கலந்தாய்வு இன்று 14ம் தேதி நடக்கும் என, அறிவித்தது.மருத்துவ கவுன்சிலிங்எம்.பி.பி.எஸ்., பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட மருத்துவபடிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று காலை 9.00 மணிக்கு துவங்குகிறது. தரவரிசை பட்டியலில் ஒன்று முதல் 2000 வரை இடம் பெற்றுள்ள எஸ்.சி., மாணவர்கள் பங்கேற்கலாம்.10.00 மணிக்கு 2001 முதல் 3000 வரை,11.00 மணிக்கு 3001 முதல் 3,500 வரை, நண்பகல் 12.00 மணிக்கு 3,501 முதல் 4000 வரை தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.


பொறியியல்


பிற்பகல் 2.00 மணிக்கு பி.டெக்., படிப்புகளுக்கான பொறியியல் கவுன்சிலிங் துவங்குகிறது. தரவரிசை பட்டியலில் 1 முதல் 3000 வரை இடம் பெற்றுள்ள எஸ்.சி., மாணவர்கள் பங்கேற்கின்றனர். 3.00 மணிக்கு 3001 முதல் 4000 வரை, 4.00 மணிக்கு 4001 முதல் 5126 வரை தரவரிசை பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.


பி.பார்ம்


மாலை 4:30 மணிக்கு நடக்கும் பி.பார்ம் படிப்புக்கான கவுன்சிலிங்கில் 650 மாணவர்கள் பங்கேற்கின்றனர். கவுன்சிலிங் கட்டணம் கவுன்சிலிங்கிற்குவரும் எஸ்.சி., பிரிவினர், தி கன்வீனர், புதுச்சேரி என்ற பெயரில் புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில், 350 ரூபாய்க்கு டி.டி., எடுத்து வர வேண்டும். அனைத்து சான்றிதழ்களை நகல் எடுத்து ஒரு செட் உடன் கொண்டுவர வேண்டும்.கவுன்சிலிங் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் தரவரிசை பட்டியலில்தங்கள் பெயர் இருப்பின், உரிய நேரத்தில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு