Skip to main content

தேர்தல் பணி செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் மாநகராட்சியை அணுகலாம்

தேர்தல் பணி செய்ய விருப்பமுள்ள மாநில அரசு ஊழியர்கள் சென்னை மாநகராட்சியைஅணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட தேர்தல்
அலுவலர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


மாநில அரசு அலுவலகங்களில் பதிவுரு எழுத்தர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் நிலையில் பணியாற்றும் மாநில அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமிருந்தால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஊழியர்கள் சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.


அவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே அலுவலக பணிநேரம் தவிர்த்து இதர நேரம் மற்றும் விடுமுறை தினங்களில் வாக்குச்சாவடி அலுவலராக தேர்தல் பணியாற்றலாம். வாக்குச்சாவடி அலுவலராக பணிபுரியும் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.அலுவலக பணிநேரம் தவிர்த்து இதர நேரம் மற்றும் விடுமுறை தினங்களில் வாக்குச்சாவடி அலுவலராக தேர்தல் பணியாற்றலாம். 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி