Skip to main content

மருத்துவம் சார் பட்ட படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம்

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உட்பட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.எஸ்சி., ரேடியோ தெரபி உள்ளிட்ட, ஒன்பது
விதமான மருத்துவம் சார் பட்டப் படிப்புகள் உள்ளன. 150 சுய நிதி கல்லுாரிகளையும் சேர்த்து, மொத்தம், 8,000 இடங்கள் உள்ளன.

இந்த படிப்புகளுக்கு, 19,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில், இன்று துவங்குகிறது.இன்று காலை, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான கலந்தாய்வும், பிற்பகலில், பொது பிரிவுக்கான கலந்தாய்வும் துவங்குகிறது.

'வரும், 27ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும்; மேலும் விவரங்களை, www.tn.gov.in, www.tnhealth.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா