Skip to main content

இரு பாடங்களில் சறுக்குவது ஏன்கல்வித்துறை இயக்குனர் கேள்வி

“பிளஸ் 2 தேர்வில், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தேர்ச்சி விகிதம் சற்று குறைவாக உள்ளது. இதை சரிசெய்ய, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது,'' என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர
முருகன் பேசினார்.

நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், நேற்று சேலத்தில் நடந்தது. இதில், இயக்குனர் ராமேஸ்வர முருகன் பேசியதாவது:

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், ஆண்டுதோறும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழக தேர்ச்சி விகிதம், வியக்கத்தக்கதாக உள்ளது. எனினும், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தேர்ச்சி விகிதம் சற்று குறைவாக உள்ளது.


மாணவர்களுக்கும், மாணவியருக்கும் இடையிலான தேர்ச்சி விகிதமும், 10 சதவீதம் வரை, வேறுபாடு உள்ளது. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யவும், கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில், தேர்ச்சி விகிதத்தை, 100 சதவீதமாக அதிகரிக்கவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு