Skip to main content

போட்டியில் ஜெயித்தால் ஜப்பானில் படிக்கலாம்!

'பெட்ரோலிய எரிபொருள் சேமிப்பு குறித்து, சிறந்த ஓவியம் வரையும் மற்றும் கட்டுரை எழுதும் மாணவர், ஜப்பான் நாட்டில் மேற்படிப்பு படிக்க, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்' என, பெட்ரோலியத்துறை அறிவித்துள்ளது.

பெட்ரோலிய எரிபொருளை சேமிப்பது குறித்து, மாநில மற்றும்
தேசிய அளவில், ஓவியப் போட்டியை, பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு நடத்துகிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். இதற்கான விவரங்கள், கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட, 23 மொழிகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளை அந்தந்த பள்ளிகளே நடத்த வேண்டும். அதன் முடிவுகளை பெட்ரோலிய எரிபொருள் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் தலா, ஒரு மாணவருக்கு, முதல் பரிசாக, 30 ஆயிரம் ரூபாய், ஒரு லேப்டாப் பரிசு வழங்கப்படும். மேலும், அந்த மாணவர்கள் ஜப்பான் நாட்டில் மேற்கல்வி கற்க அனைத்து வசதியும் செய்து தரப்படும். இரண்டாம் பரிசாக, 20 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசாக, 12,500 ரூபாய் வழங்கப்படும். இதற்கான விவரங்களை, www.pcra.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு