Skip to main content

போட்டியில் ஜெயித்தால் ஜப்பானில் படிக்கலாம்!

'பெட்ரோலிய எரிபொருள் சேமிப்பு குறித்து, சிறந்த ஓவியம் வரையும் மற்றும் கட்டுரை எழுதும் மாணவர், ஜப்பான் நாட்டில் மேற்படிப்பு படிக்க, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்' என, பெட்ரோலியத்துறை அறிவித்துள்ளது.

பெட்ரோலிய எரிபொருளை சேமிப்பது குறித்து, மாநில மற்றும்
தேசிய அளவில், ஓவியப் போட்டியை, பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு நடத்துகிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். இதற்கான விவரங்கள், கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட, 23 மொழிகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளை அந்தந்த பள்ளிகளே நடத்த வேண்டும். அதன் முடிவுகளை பெட்ரோலிய எரிபொருள் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் தலா, ஒரு மாணவருக்கு, முதல் பரிசாக, 30 ஆயிரம் ரூபாய், ஒரு லேப்டாப் பரிசு வழங்கப்படும். மேலும், அந்த மாணவர்கள் ஜப்பான் நாட்டில் மேற்கல்வி கற்க அனைத்து வசதியும் செய்து தரப்படும். இரண்டாம் பரிசாக, 20 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசாக, 12,500 ரூபாய் வழங்கப்படும். இதற்கான விவரங்களை, www.pcra.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா