Skip to main content

அங்கீகாரமுள்ள படிப்புகள் - அங்கீகாரம் இல்லாத படிப்புகள்

அங்கீகாரமுள்ள படிப்புகள் - அங்கீகாரம் இல்லாத படிப்புகள் ; 'டுபாக்கூர்' நர்சிங் கல்லூரிகள்: கவுன்சில் எச்சரிக்கை
'பல நிறுவனங்கள், அங்கீகாரம் பெறாத நர்சிங் படிப்புகளை நடத்தி வருவதால், அவற்றில் சேர்ந்து மாணவ, மாணவியர் ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது.தமிழகத்தில், நர்சிங்
பள்ளி மற்றும் கல்லுாரிகள் நடத்த, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அனுமதி தரவேண்டும். ஆனால், அப்படி அனுமதி பெறாமல், பல அமைப்புகளும், விதவிதமான பெயர்களில், நர்சிங் படிப்புகளை நடத்தி வருகின்றன.


'குறைந்த கட்டணம், படிக்கும் போதே சம்பளம்' என்ற கவர்ச்சி விளம்பரத்தை நம்பி, இவற்றில் சேரும் மாணவர்கள், சான்றிதழை பதிவு செய்ய முடியாமல், திணறுகின்றனர். எனவே, 'இதுபோன்ற, 'டுபாக்கூர்' கல்லுாரிகளில் சேர்ந்து ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது. இதுகுறித்து, நர்சிங் கவுன்சில் பதிவாளர் ஆனிகிரேஷ் கலைமதி கூறியதாவது:
அங்கீகாரம் உள்ள நர்சிங் பயிற்சி நிறுவனங்களில் படிப்பதே, முறையான கல்வி. அங்கீகாரம் இல்லாத பல படிப்புகள், சங்கங்கள், மருத்துவமனைகள் மற்றும் பல்கலைகளிலும் நடத்தப்படுகின்றன. சான்றிதழை பதிவு செய்ய முடியாதது தெரிந்ததும், ஏமாற்றம், காலம், பண விரயத்தை நினைத்து, மாணவர்கள் மனமுடைந்து போகின்றனர்.

பாரத் சேவாக் சமாஜ் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, போலி பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, ஏமாற வேண்டாம். தமிழகத்தில், 169 நர்சிங் கல்லுாரிகள், 204 நர்சிங் பள்ளிகள் அனுமதி பெற்றுள்ளன. இதன் விவரங்களை www.tamilnadunursingcouncil.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

அங்கீகாரமுள்ள படிப்புகள்
 பி.எஸ்சி., நர்சிங் - 4 ஆண்டு
 டிப்ளமோ இன் நர்சிங் - 3 ஆண்டு
 டிப்ளமோ இன் ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப் - 2 ஆண்டு
இவை, மூன்றும், பிளஸ் 2 முடிந்த பின் படிக்கும் படிப்புகள். இவை, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய தகுதியானவை. நர்சிங் கவுன்சிலில் பதிவு பெற்றால், உலகம் முழுவதும் பணியாற்ற முடியும்.

அங்கீகாரம் இல்லாத படிப்புகள்
 டிப்ளமோ இன் நர்சிங் அசிஸ்டெண்ட் (6 மாதம்,
2 ஆண்டுகள்)
 டிப்ளமோ இன் நர்சிங் (2 ஆண்டு)
 டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு நர்சிங் (2 ஆண்டு)
 வில்லேஜ் ஹெல்த் நர்சிங் (2 ஆண்டு)
 டிப்ளமோ இன் நர்சிங் எய்டு (2 ஆண்டு)
 டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு மற்றும் பிராக்டிக்கல் நர்சிங்
 டிப்ளமோ இன் பிராக்டிக்கல் நர்சிங் (1 ஆண்டு, 2 ஆண்டுகள்)
 சர்டிபிகேட் இன் நர்சிங் (1 ஆண்டு)
 நான் டெக்னீசியன் கோர்ஸ்
 டிப்ளமோ இன் நர்சிங் எய்டு (2 ஆண்டு)-

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு