Skip to main content

இலவச திட்டங்களை கவனிக்க மாணவர் நல திட்ட அலுவலர்?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில், காலணிகள் மற்றும் சீருடைகள் வழங்குதல் உட்பட, 14 இலவச திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றை, நேரடியாக பள்ளிகள்
மூலமே பள்ளிக்கல்வித் துறை அமல்படுத்துகிறது.

பாடம் நடத்தும் ஆசிரியர்களே, இந்த பணிக்கும் பயன்படுத்தப்படுவதால், கல்விப் பணி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபற்றி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழுவிலும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், சங்கத்தின் கிழக்கு சென்னை மாவட்ட தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழக அரசு பள்ளிகளில், பள்ளிக்கல்வி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. ஓய்வு பெறுவோருக்கு பதிலாக, புதியவர்கள் நியமிக்கப்படுவதில்லை. அரசின், 14 வகை நலத்திட்டப் பணிகளிலும், ஆசிரியர்களே ஈடுபடுவதால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்த பணிகளை கவனிக்க, மாணவர் நலத்திட்ட அலுவலர் என்ற பெயரில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா