Skip to main content

வங்கி போட்டி தேர்வுக்கு சென்னையில் இலவச பயற்சி

வங்கிப்பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் சேர ஆதிதிராவிட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.


டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும் அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து, ஆதிதிராவிட
மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்கு வேலைவாய்ப்புகளுக் கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் 22 மையங்களில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த இலவச பயிற்சி வகுப்பு களில், கல்லூரி பேராசிரியர்கள், இன்சூரன்ஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள், மாண வர்களுக்கு பயிற்சி அளித்துவரு கின்றனர். இந்நிலையில், 10,000 வங்கி காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதையடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 3 மாத காலத்துக்கு வாராந்திர இலவச வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.


சென்னையில் பாரிமுனை அருகில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயில் அக்ரஹாரத்தில் (அரண்மனைக்கார தெரு) உள்ள பயிற்சி மையத்தில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடைபெற இருக்கிறது.விருப்பம் உள்ளவர்கள் இந்த இலவச வகுப்பில் சேர 9444641712, 9444030745, 9444982364, 9444928162, 9444241696 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என, பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா