Skip to main content

"பள்ளிகளில் சமையல் பாத்திரங்களை சுகாதாரமாக பராமரிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்'

பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சமையல் பாத்திரங்களை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.க. பரமத்தியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ச. ஜெயந்தி வியா
ழக்கிழமை ஆய்வு செய்தார்.


அப்போது க.பரமத்தி ஊராட்சியில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்ட அவர், க.பரமத்தி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை ஆய்வு செய்து, பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சமையல் பாத்திரங்களை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என பணியாளர்களை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து முன்னூர் ஊராட்சி காளிபாளையத்தில் தனிநபர் கழிப்பறை கட்டும் பணிகளை பார்வையிட்டார்.ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், முரளிகண்ணன், அரவக்குறிச்சி வட்டாட்சியர் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் செளந்தரவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா