Skip to main content

'மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுங்க!' எல்.ஐ.சி.,க்கு ஐகோர்ட் கண்டிப்பான உத்தரவு

'எல்.ஐ.சி.,யில், பயிற்சி வளர்ச்சி அதிகாரிகளுக்கான பணியிடங்களில், 3 சதவீதத்தை, மாற்று திறனாளிகளுக்காக, காலியாக வைத்திருக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலுார் மாவட்டம், தெக்குபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்; எல்.ஐ.சி.,
முகவராக பணிபுரிகிறார். மாற்று திறனாளியான இவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஜூன், 1ம் தேதி, 664 பயிற்சி வளர்ச்சி அதிகாரிகள் பணியிடங்களுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பொது பிரிவினருக்கு, 410; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 146; ஆதி திராவிடர் வகுப்பினருக்கு, 95; பழங்குடியினருக்கு, மூன்று மற்றும் பின்னடைவு காலியிடங்கள் என, இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீடு பற்றிய, எந்த குறிப்பும் அதில் இடம் பெறவில்லை. சட்டப்படி, 3 சதவீத பணியிடங்கள், மாற்று திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். 

எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடங்களை ஒதுக்கி, புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:மாற்று திறனாளிகளுக்கு, சட்டப்படி வழங்க வேண்டிய, 3 சதவீத இடங்களை, எல்.ஐ.சி., நிர்வாகம் வழங்க தவறி விட்டதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கான, 3 சதவீத இடங்களை நிரப்ப, தனியாக விளம்பரம் வெளியிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தர

விட்டுள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா