Skip to main content

என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முறையில் மாற்றம்: அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 538 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் உள்ளன.

மாணவ-மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று என்ஜினீயரிங் சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் பி.இ. முதலாம் ஆண்டில்
கணிதத்தில் ஏராளமானவர்கள் பெயிலாகுகிறார்கள். காரணம் மனப்பாடம் செய்வதுதான். இந்த நிலையை மாற்றவும் வேலை வாய்ப்பையும் கருத்தில் கொண்டு என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளின் தேர்வு முறையை சீரமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
அதைத்தொடர்ந்து தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு 3-வது செமஸ்டர் முதல் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதாவது 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இந்த முறை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் அமல்படுத்தப்படுகிறது.

அதாவது இப்போது வினாத்தாளில் ‘ஏ’ ‘பி’ ஆகிய பிரிவுகளில் மட்டுமே கேள்விகள் இருக்கும்.‘ஏ’ பிரிவில் 10 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 2 மதிப்பெண் உண்டு. அதுபோல ‘பி‘ பிரிவில் 16 கேள்விகள் கேட்கப்படும். தலா 5 மதிப்பெண் உண்டு.

ஆனால் இனிமேல் கேட்கப்படும் புதிய வினாத்தாள் விவரம் வருமாறு:-

கேள்வித்தாளில் ‘ஏ’ பிரிவில் எந்த மாற்றமும் இல்லை. ‘பி’ பிரிவில் 80 மதிப்பெண்களுக்கு பதிலாக 65 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்பட உள்ளது. மேலும் ‘சி’ பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அதில் 15 மதிப்பெண்ணுக்கு கேள்வி கேட்கப்படும். அந்த கேள்வியை மாணவர்கள் புரிந்தால் தான் எழுத முடியும். மாணவர்களின் அறிவை சோதிக்கும் வகையில் அந்த கேள்வி இருக்கும். நன்றாக புரிந்திருந்தால் மட்டுமே பதில் அளிக்கமுடியும். இந்த புதிய முறை கேள்வி, கொண்ட வினாத்தாள் தற்போது சேர்ந்து உள்ள மாணவ-மாணவிகளுக்கு 3-வது செமஸ்டரில் இருந்து அமலுக்கு வருகிறது.

இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு