Skip to main content

வகுப்பு புறக்கணிப்பு: பேராசிரியர்கள் முடிவு

அரசு கல்லுாரிகளில் பணியாற்றும், 2,000 பேராசிரியர்களுக்கு, மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.தமிழக கல்லுாரி கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், 83 அரசு கல்லுாரிகளில், 8,000
பேராசிரியர்கள் பணியாற்று கின்றனர். இவர்களில், கணிதம், அறிவியல், வரலாறு, பொருளியல் போன்ற பாடங்களுக்கு, 2,000 பேர் கவுரவ பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக, மாதம், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த ஊதியம், மூன்று மாதங்களாக தமிழக அரசால் வழங்கப்படவில்லை. அதனால், கவுரவ பேராசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்பிரச்னை தொடர்பாக, கல்லுாரி கல்வி இயக்குனர், உயர்கல்வி முதன்மைச் செயலர் உள்ளிட்டோருக்கு பல மனுக்கள் அளித்தும் பலனில்லை. அதனால், 2,000 கவுரவ பேராசிரியர்களும் ஒட்டு மொத்தமாக வகுப்பை புறக்கணிக்க திட்டமிட்டுஉள்ளதாக, கல்லுாரி பேராசிரியர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு